Breaking

Wednesday, April 19, 2017

நீ வாருமைய்யா

எங்களால் நெல்
விதைத்த பூமி
நெல் விளைந்த பூமி
வாடியது
நீர் இல்லாமல்
பூமி மட்டும் அல்ல
எங்களது
வயிறும் தான்.....



வாழ வைத்த மண்
வறண்டு போய்
இருக்குதய்யா
நீரில்லாமல் வாடுதய்யா
மண்ணும்
எங்க உயிரும்....



சொட்டுத் தண்ணியின்றி
பச்சைப் பயிர்
தீயுதய்யா
துன்பம் எல்லாம் சேர்ந்து
வந்து கை கொட்டி
சிரிக்குதயா
ஆட்டம் காணுதய்யா
எங்க வாழ்க்கை......



சுற்றி இருந்த
நீரும் வற்றிப்போச்சு
சுற்றி இருந்த
பல உறவும்
செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதை
கேட்ட காதுகளும்
கெட்டுப் போச்சு........



உலக பசி தீர்த்த
கைகளய்யா
எங்க பசி தீர்க்க
ஒரு நாதியில்லயா?
தண்ணீர் இன்றி
கண்ணீர்வடிக்கிறோம்
கரம் கொண்டு
துயர் துடைக்க யாருமில்லையா?.....



யாரும் இல்லை
என்று இருக்க
மழையே! நீயும்
எங்களை
கைவிட்டதேனோ??

காலம் கடத்தாமல்
வாருமைய்யா
எங்கள் பசி தீர்க்க
மழையே!
நீ வாருமைய்யா....!

♥{ Fathima Hana }♥

Post Top Ad

Your Ad Spot

Pages