Breaking

Monday, May 23, 2016

என் கால்களை திருடியது யார்?

மறதி எம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் காரணியாக தொழிற்படுகின்றது. மறதி மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் பரிசாகும். மறதி இல்லையெனில் மனிதனால் சில வினாடிகள் கூட நிம்மதியாக வாழமுடியாது

ஜேர்மனியைச் சேர்ந்த, இரு கால்க­ளையும் இழந்த பராலிம்பிக் வீராங்கனை ஒருவர் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டி­ ருந்த வேளையில் அவரின் செயற்கைக் கால்கள் இரண்டும் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.


'எனது கால்களைக் கண்டுபிடிக்க உத­வுங்கள்' என மன்றாட்டமாக அவர் டுவிட்­டரில் கோரிக்கை விடுத்திருந்தார். வனேசா லோ எனும் இவ்வீராங்கனை 1990 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். 15 ஆவது வயதில் ரயில் ஒன்றினால் மோதப்பட்டு இரு கால்களையும் இழந்தார். எனினும், செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு எழுந்து நடமாட ஆரம்பித்த அவர் விளையாட்டுப் போட்டி­களிலும் பங்குபற்றுகிறார்.

மாற்றுத் திறனா­ளிகளுக்கான T42 100 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல், T42 நீளம் பாய்தல் போட்டிகளில் அவர் பங்குபற்­றுகிறார். 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பரா­லிம்பிக் போட்டிக­ளிலும் அவர் பங்கு­பற்றினார்.


கடந்த வருடம் கத்­தாரில் நடைபெற்ற, சர்வதேச பரா­லிம்பிக் குழுவின் (ஐ.பி.சி) உலக வல்லவர் போட்டிகளில் வனேசா லோ, நீளம் பாய்தலில் 4.79 மீற்றர் பாய்ந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றவர்.

தற்போது அமெரிக்காவின் ஒக்ல­ஹோமா நகரில் அவர் தங்கியிருக்­கிறார். அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தற்போது நடைபெறும் ஐ.பி.சி. குரோன் ப்றீ போட்டிகளிலும் அவர் பங்குபற்றுகிறார். இப் போட்டிகளில் நீளம் பாய்தலில் அவர் 4.65 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றார்.


அதன்பின் 100 மீற்றர் போட்டியில் பங்குபற்­றவிருந்த நிலையில், ஓட்டப் போட்டிக்­காக அவர் பயன்படுத்தும் செயற்கை கால் காணாமல் போயிருந்தது. அதையடுத்து தனது கால்களைக் கண்­டுபிடிக்க உதவுமாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் வனேசா. இக் கால்களையே அவர் எதிர்வரும் ரியோ பராலிம்பிக் போட்டிகளிலும்
பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்­கது.

அரங்கில் வைக்கப்பட்டிருந்த இக் கால்கள் காணாமல் போனவுடன் தான் மிகவும் மனமுடைந்து போனதாக அவர் தெரிவித்தார். 'யாரேனும் இப்படி செய்வார்கள் என நான் எண்ணியிருக்கவில்லை. அவை விசேடமான பை ஒன்றுக்குள் வைக்கப்­ பட்டிருந்தன. எனவே, எவரும் அதை தவ­றுதலாக எடுத்துச் சென்றிருக்க வாய்ப்­பில்லை' என அவர் கூறினார்.


எனினும் நேற்றுமுன்தினம் ஞாயிற்­றுக்கிழமை காலை மீண்டும் அக்­ கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்தும் வனேசா டுவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். பின்னர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்­தக்கது. இவர் 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக வல்லவர் போட்டிகளின்போது, ஓட்டப்போட்டியில் தான் பயன்படுத்தும் செயற்கைக் கால்களை ஹோட்டல் அறையிலேயே மறதியாக வைத்துவிட்டு விளையாட்டு
அரங்குக்குச் சென்றிருந்தார்.

பின்னர் அவரின் பயிற்றுநர் ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்று
அக் கால்களை கொண்டு வந்து கொடுத்தாராம். மறதியே அவரை மற்றவர் மீது சந்தேகம் கொள்ள வைத்தது. வாழ்வில் எமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறப்போம் பிறரை மன்னிப்போம்


நன்றி: மெட்ரோநிவ்ஸ்

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Post Top Ad

Your Ad Spot

Pages