Breaking

Friday, February 20, 2015

புரியும் புதிர்கள்

காலம்
உனக்கிருக்க
காலனை
அழைப்பதேனோ?

ஞாலம்
போற்ற இருக்கு
போர்வையில்
உறங்குவதேனா?

விழித்து
வெற்றி தேடு
பலித்த
நாட்கள் ஓட

போர்க்களம்
புகுந்த பின்
தயக்கமேனோ?
போரிட
பலமிருந்தும்
வெட்கமேனோ?


வலிகள்
என்ன புதிதா?
வலிகளை மறக்கும்
வழி செய்வது
புதிரா?

விதி நம்பி
மதி
இழக்கலாமோ?
தோல்விகள்
குரைக்க
நம்பிக்கை
நரைக்கலாமோ?

உறங்காத
விழி கொண்டு
இறங்கிடு
உறங்காத மனமே

விடா முயற்சியை
விடாத போது
உனக்கு
தோல்விகள் ஏது?

♥*AZRA NUZRAH*♥



Post Top Ad

Your Ad Spot

Pages