Breaking

Thursday, August 27, 2015

கோளுரை

மதியை மதித்தவன்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்





வெற்றி எழுத்தாய் 
வியர்வையைக் கொண்டவன் 
விதியை எழுதுகிறான் - பொய் 
நெற்றி எழுத்தை 
நம்பியவன் நீ 
நீரி்ல் எழுத்தானாய்



கைகளில்தான் உன் 
வரும்காலம் அது 
கைகளிலின் சக்தியிலே - வெறும் 
பொய்களின் வழியில் 
போனவனே! அதை 
ரேகையில் தேடுகிறாய் 


கோளும் நாளும் 
குறித்து ராமன் 
கொற்றவன் ஆவதற்கு - அந்த 
நாளில் என்ன 
நடந்தது ? பாவம் 
நடந்தான் காட்டுக்கு 

காலம் பார்த்து 
நடந்தது தானே 
கண்ணகி கல்யானம் - அவள் 
கோலம் இழந்து 
கொண்டதுவோ மலர் 
குங்கும அலங்கோலம் 



சாதகம் பார்த்தாய் 
சகுனம் பார்த்தாய் 
சகலமும் பார்த்தாயே - ஒரு 
பாதகம் இன்றி 
வாழ்ந்தாயா? வெறும் 
பயத்தால் சாகின்றாய் 





அழுவது சிலநாள் 
சிரிப்பது சிலநாள் 
அ னைவர்க்கும் உள்ளதுதான் - கதை 
முழுவதும் உனக்கு 
முன்னால் தெரிந்தால் 
மூச்சில் சுவை ஏது? 

*# டாக்டர் அப்துல் ரகுமான் #*


Post Top Ad

Your Ad Spot

Pages