Breaking

Friday, August 7, 2015

உபைதுல்லா

கண்ணீர் விட்டு - என்
பேனா தொட்டு
உபைதுல்லா(சாச்சா)வுக்காக
உள்ளத்திலிருந்து எழுதும்
உண்மை வரிகளிது

தட்டிக்கழிக்க முடியா
வார்த்தைகளை என் மனதில்
கொட்டி நிறைத்து
தட்டிக் கொடுத்தாய்


ஆசானாய் நீயிருந்து
அறிவுப் போசணை
வழங்கினாய்
மீஸான் தராசினிலே
உன் நன்மை தட்டு
உயராமல் இருந்திடவே
உலகத்தாரின் இறைவனவன்
உதவிடுவானே


அன்று நான்
முன்னேற வழிகாட்டினாய்
இன்று உன்
மண்ணறைக்கு
அருள்மதியால்
ஒளியூட்டுவான்


பணத்தை நீ
சம்பாதிக்காவிட்டாலும்
பல மனங்களை
சம்பாதித்துக் கொண்டாய்
சாந்தி நிறைந்த
சன்மானம் அதை
சர்வ வல்லோன் பரிசளிப்பான்

மேலான சுவனமதில்
மேற்தரக் கிளையினிலே
வீழாமல் நீயிருக்க
வீழாத கரமேந்தி
நாள்தோறும் வேண்டிடுவேன்......









Post Top Ad

Your Ad Spot

Pages