Breaking

Tuesday, August 25, 2015

வாழ்விதுவே!

மண் மீது நாம்
கண்டதெல்லாம்
நிலைப்பதில்லை
என்றபோதும்
விண்ணைத்தொடும்
ஆசைகள் பல
நுழைகின்றது மனதிலே....



இல்லை இல்லை 
போலி தான்
என்றெடுத்துச் சொல்லியும்
புரிந்துகொள்ள 
முயலுவதில்லை
மாயை சூழ்ந்த மனமே!

கிடைத்ததை மற்றவரோடு 
பகிர்ந்து
வாழும் நற்பண்பு 
நம்மிடத்திலே
என்றுமே இருக்க வேண்டும்



என்னருமைச் 
செல்வமே
ஒற்றுமை என்ற 
சொல்லோடு நாம்
ஒருமித்த வாழ்ந்துவிட்டால்
பெற்றதில் 
பெரும் செல்வம்
அதுவே இந்தப் பூமியிலே!

பொன் சேர்த்துப் 
பொருள் சேர்த்து
சுகபோகம் அனைத்தும் 
சேர்த்து
நிம்மதியை 
இழந்து தவிப்போர்
எத்தனை இந்த மண்ணிலே??

அன்பென்ற 
தாரக மந்திரம் நம்
உள்ளங்களில் 
விதைத்துவிட்டால்
துன்பங்கள் தொடருவதில்லை 
நம்
அன்றாட வாழ்வுதனிலே!

#* வத்தளையூர் துஷ்யந்தி *#

Post Top Ad

Your Ad Spot

Pages