Breaking

Sunday, March 15, 2015

நான் தொந்தரவானேன்

வியர்வை சிந்தி
படிக்க வைத்தேன்
வீதியில்
விட்டு விட்டான்

வெயிலில் நடந்து
உழைத்துக் கொடுத்தேன்
வெயிலோடு உறவாட
விட்டு விட்டான்

ஓடமாய் இருந்து
கரை சேர்த்தேன்
ஓரத்தில்
தள்ளி விட்டான்

என்
உறக்கம் தொலைத்து
மகனை
உறங்க வைத்தேன்

உளறும் கிழவா!
உனக்கு
உறைவிடம் இல்லையென
உதைத்து விட்டான்

Post Top Ad

Your Ad Spot

Pages