Breaking

Wednesday, June 3, 2015

முடிந்து போச்சு !!!

மரணத்தை
நம்பினாலும் மன இச்சைக்கு
அடிமையாகி மாய உலகில்
மயங்கியே வாழ்ந்து மடிகிறான்
மனிதன்!!

கிளைக‌ள்
தாவும் குர‌ங்குக‌ள் போலே
அவ‌ன் ம‌னதில் தோன்றும்
எண்ண‌ங்களும் ஆசைகளும்
ஆயிர‌மாயிரம்!!




ஆசைக்க‌ட‌லில்
பேராசைப்படகு ஓட்டுகிறான்
பாவ‌ங்க‌ளில் திளைக்கிறான்
வாசிக்காய் மனசாட்சியை
விற்கிறான்!!

போதையில்
மதி மயங்கியே கிடக்கிறான்
ஏதோ ஒன்றுக்காய் அலைகிறான்
மாதுவுக்காய் மானத்தையும்
இழ‌க்கிறான்




சிறியவர்
பெரியவர் கிழடுகள் வரை
பாலியலே பாடமா போச்சு
நம்பிக்கை காணாமலாச்சி
மானம் என்பதும் மலை
ஏறிப்போச்சு!!




உடல்
வாழ உயிர் வேண்டும்
உயிருக்கு மானம் வேண்டும்
மானம் போயும் வாழுகிறது
உயிர்கள்!!

என்ன‌
உலகமடா வெறுத்துப் போச்சு
உண்மைகள் தூங்கிப்போச்சு
ஏமாற்றத்துடனே மூச்சும்


முடிந்து போச்சு!!

*# பூமதீன் #*











www.ariwahem.blogspot.com











Post Top Ad

Your Ad Spot

Pages