Breaking

Monday, April 11, 2016

மாய உலகம்

நிரந்தரமற்ற
விடுதியடா
அந்தோ மாய
உலகமடா
மறைந்து போனது
மனிதமடா
எங்கு பார்த்தாலும்
கலகமடா

ஊற்றெடுப்பதெல்லாம்
உதிரமடா
குவலையம் குமுறி
சுழலுதடா
கொடியவன் நிலைகண்டு
அழுகுதடா
கொடுமைகள் நிறைந்திங்கு
கிடக்குதடா

உயிர்களோ கணக்கின்றி
இறக்குதடா
வையகமெங்கும்
வறட்சியடா
காரணம் மனிதனின்
கிளர்சியடா
மதிகெட்டோர் செயல்கண்டு
அச்சமடா
மண்ணிலே வாழ்வது
கஷ்டமடா

நிரந்தரமற்ற
விடுதியடா
இதில் நீ நானென்று
போட்டியாடா
அடுத்தவன் ஜெயித்தால்
போதுமடா
அடுத்த நிமிடமே அவனுயிர்
போகுமடா


சுயநலம் கொடிகட்டிப்
பறக்குதடா
சுதந்திரம் தொலைந்திங்கு
போனதடா
சுற்றுப் புறமெங்கும்
சூழ்ச்சியடா
சுட்டுக் கொல்வதிலே
சிலர் வாழ்க்கையடா

ஒற்றுமை சிதறிப்
போனதடா
உலகமே சமர்க்
களமானதடா
இரக்கம் மனதில்
இறந்ததடா
இன்று இரத்தம் தேடியே
அலையுதடா

அலங்காரம் நிறைந்த
உலகமடா
அதில் ஆபத்தேயதிகம்
உள்ளதடா
அளவுக்கு மீறி நீ
போகாதடா
அது அழிவிலே உன்னை
சேர்க்குமடா

வஞ்சகம் வேண்டாம்
பாரிலடா
வாழ்வதே கொஞ்சக்
காலமடா
கலகம் விதைத்தென்ன
லாபமடா ?
சேதம்தான் கடைசியில்
மிஞ்சுமடா

♥{ அபூ நசீர் }♥


If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Post Top Ad

Your Ad Spot

Pages