Breaking

Thursday, April 7, 2016

Whatsapp வழங்கும் புதிய பாதுகாப்பு முறை இதுதான்

இனி உங்கள் Whatsapp மெசேஜ்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும் பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது.
ஏன் வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.

உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப்பில் அனுப்பப்படும் கோப்புக்கள், மேற்கொள்ளப்படும் குரல் வழி அழைப்புகளும் encrypt செய்யப்படும் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட தொடர்பாடலை பாதுகாப்பது, தமது அடிப்படையான நம்பிக்கைகளில் ஒன்று என சமூக வலைத்தள ஊடக ஜாம்பவானான பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
நாம் அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (Encrypt) (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லாததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர்களிடம் சென்றடையும் மெசேஜ், நம் நண்பரிடம் இருக்கும் 'ப்ரைவேட் கீ' யால் டீக்ரிப்ட் ( Decrypt) செய்யப்படுகிறது. இதனால் நம் நண்பர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது. எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது. அரசாங்கத்தால் கூட பார்க்க முடியாது.


தனது அனைத்து பயனர்களின் தொடர்பாடல்களையும் encrypt செய்யப் போவதாக உடனடி தகவல் பரிமாற்றச் சேவையான வட்ஸ்அப் அறிவித்துள்ளது. end-to-end encryption மூலம் அனுப்புவரின் சாதனத்திலிருந்து வெளியாகும் குழம்பும் தகவல்கள், பெறுபவரின் சாதனத்தினாலேயே அந்தத் தகவலானது தகவலாக ஒழுங்கமைக்கப்படும். இதன் மூலம் தகவல்கள் இடைமறிக்கப்பட்டால் அதை வாசிக்கமுடியாது. இதனால் குற்றவாளிகளாலோ அல்லது சட்டத்துறை அதிகாரிகளாலோ வட்ஸ்அப் தகவல்கள் இடைமறிக்கப்பட்டால் அவற்றை வாசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இணையக் குற்றவாளிகள், ஹக்கர்கள், அடக்கு முறையான அரசாங்கங்கள், ஏன் நாங்களும் என எவராலும் அந்த தகவலில் என்ன இருக்கின்றது என பார்வையிட முடியாது என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


இச் சேவை இலகுவானது என்றும் நீங்கள் தகவலொன்றை அனுப்பும்போது அதை பெறுபவரோ குழுவோதான் அதை வாசிக்க முடியும் வட்ஸ்அப் செயலியின் இறுதிப் பதிப்பைக் கொண்டிருக்கும் பயனர்கள் தகவலை அனுப்பும்போது மேற்படி மாற்றம் பற்றி அறிவுறுத்தப்பட்டதுடன் மேற்படி மாற்றமானது தானாகவே அனைவருக்கும் செயற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி நகர்வானது பேச்சுச் சுதந்திரத்துக்கு கிடைத்த பாரிய வெற்றி என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தால், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது என சில அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்க விரும்புகிறது.

வாட்ஸ்அப் பாவணையாளர்கள் தற்போதே உங்கள் வாட்ஸ்அப்பை Update செய்து கொள்ளுங்கள்

பின்னர் வாட்ஸ்அப்பில் SETTING – ACCOUNT – SECURITY சென்று Show security notification ஐ ON செய்து கொள்ளுங்கள்






Update செய்த பதிப்பில் பின்வரும் மாற்றங்களை அவதானிக்க முடியும்




♦Android பாவணையாளர்கள் Playstore கு செள்று உங்கள் வாட்ஸ்அப்பை Update செய்து கொள்ளுங்கள்

♦Apple பாவணையாளர்கள் Itunes கு செள்று உங்கள் வாட்ஸ்அப்பை Update செய்து கொள்ளுங்கள்

♦Windows பாவணையாளர்கள் Windows store கு செள்று உங்கள் வாட்ஸ்அப்பை Update செய்து கொள்ளுங்கள்

இது பற்றிய மேலதிக தகவல்களை
பெற்றுக்கொள்ள Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்


தொடர்புடைய இணைப்புக்கள் :

♥ உங்கள் ஸ்மார்ட் போனில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான அப்ளிகேஸன்களை பயன்படுத்துவது எப்படி?

http://ariwahem.blogspot.nl/2016/04/blog-post_3.html?m=1

♥ Whatsapp ல் தடித்த (BOLD), வளைந்த (ITALIC) மற்றும் குறுக்குக்
கோடிட்டஎழுத்துக்களை எழுதலாம்
(Playstore ல்கிடைக்காத Whatsapp பதிப்பு இங்கே)

http://ariwahem.blogspot.in/2016/03/ whatsapp-bold-italic-playstore-whatsapp_ 31.html?m=1
♥ Youtube , facebook வீடியோக்களைஇலகுவாகவும் வேகமாகவும் உங்கள் smartphone ல் Download செய்யுங்கள

http://ariwahem.blogspot.in/2016/03/youtube- facebook-smartphone-download.html?m=1

Post Top Ad

Your Ad Spot

Pages