Breaking

Tuesday, September 1, 2015

இயற்கையின்விஞ்ஞானி

இரத்தத்தை
பாலாக்கும்
இயற்கையின்
விஞ்ஞானி...

குழந்தையின்
குறிப்பறிந்து
செயலாற்றும்
மெய்ஞானி....

அன்பையும்
அழகையும்
செதுக்கிட
கிடைத்திடும்
சிற்பம்...


பிறந்த பின்னும்
பிள்ளையை
காத்திடும்
கற்பம்...

எந்த
மொழிகளுக்குள்ளும்
முடக்க முடியாத
மூன்றெழுத்துக்
கவிதை...

அடக்க
முடியாத
வலிகளுக்குள்ளும்
எனை
ஈன்றெடுத்த
விரதை....


நான் கொஞ்சிட
பிஞ்சுகள்
எனக்குண்டு
மூன்று...

நீ கொஞ்சிடும்
பிள்ளையாய்
வாழணும்
நூறாண்டு...

என்
இறப்பு
உன் காலடியில்
நிகழ வேண்டும்...

அதுவரை
நான்
என் தாய்மடியில்
தவழ வேண்டும்...

#* நளீம் செயின் *#

Post Top Ad

Your Ad Spot

Pages