Breaking

Friday, September 4, 2015

சீதனம் - Dowry

கன்னிக்கு ஏன்
வேதனை
கரும சீதனத்தின்
சோதனை.

கன்னிக்கோ
கலியாணம்
கடந்த வயது.
கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி.


கல்யாண ராமர்களோ
கன பேர்,
கரும சீதனக்
கனவுகளோடு..

கல்யாண ராமனுக்கு
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை.
கரும்பு தின்னக் கூலியோ... ?
கணவனாக காசோலையோ...?

கண் கெட்ட
கல்யாண காளையர்
காசு கொடுத்தும்
கடை,நகை,வாகனமாம்
கணக்குப் பார்க்கின்றான்
கச்சிதமாய்...


கணக்குப் பிழையானது,
கல்யாணம் விலையானது,
கன்னியின் இன்பக்
கனவுகளோ கானல் நீராய்
கரைகிறது.......!

கலியாணச் சந்தையிலோ
காசுகளோ குவிகின்றது,
காலங்களோ கடந்தாலும்,
கல்யாண ராமர்களோ
கலக்குகின்றார்கள்-புதுக்
கட்டழகோடு....!

கன்னிக்கு என்ன 
வேதனை
கரும சீதனத்தின் 
சோதனை.

♥}*றியாஸ் முஹமட்* {♥

Post Top Ad

Your Ad Spot

Pages