Breaking

Wednesday, September 9, 2015

கவிதை - Poem

எப்பொழுதும்
நாமெழுதும்
கவிதைகளில்
எள்ளளவும்
பயன் விளைக்க
கருத்து வேண்டும்

முப்பொழுதும்
படிக்கின்ற
மக்களுக்கு
முழு மனதில்
நம் கவிதை
மணக்க வேண்டும்



தப்பாக
தான்தோன்றித் 
தனமாய் நாளும் 
தரமில்லா 
கவிதைகளை 
எழுதி நின்றால் 

ஒப்புக்கு
கவிதையென 
இருக்கும்
பின்னே 
ஒரு போதும் 
முகவரி நம்
நிலைப்பதில்லை

♥{*அஷ்பா அஷ்ரப் அலி*}♥

Post Top Ad

Your Ad Spot

Pages